Saturday, December 8, 2007

திருடப் படிக்கிறேன்!




நீ

உதடு குவித்து

உச்சரிக்கையில்

வார்த்தைகளுக்கு

மஞ்சள் நீராட்டு விழா



உன்

சுவாசத்திலேறி

தற்கொலை புரிய

வரம்பெற்று ஆக்சிஜன்


நீ

உடுத்திய

துணியை முகர

மலர்களிடையே

போட்டாபோட்டி


நான்

திருடப் படிக்கிறேன்.


****


உன்னைப்

பார்த்துக் கொண்டே

விழுகிற

மழை

காய்வதே இல்லை.


****
உன்

மூச்சுக்காற்றெனும்

தீக்குச்சியில்

தொற்றி எரிகிறது

என்

செம்மாலை வீதி


நெருப்பை அணைக்க

ஓர் இரவு பற்றாது.


****
என்

கேலிகளுக்குப்

பயந்தோடிய

பெண்களுக்கு மத்தியில்

முதன்முதலாய்

என் மீசையில்

வெட்கத்தைத் தெளித்தவள் நீ


ஆழத் தூக்கத்தில்

என்

அந்தப்புரக் கனவுமாளிகையில்

முதன்முதலாய்

சேலையோடு நுழைந்தவள் நீ

***

No comments: