Saturday, December 22, 2007

பணக்காரருக்காக அழுத அயலான்!


கொட்டாவி விரட்டும் மிட்டாய்கள்.

ஒரு பெண்மணி, யாருமில்லாத மாதாகோயிலில் தன் கைகளால் தலையைத் தாங்கியவாறே உட்கார்ந்திருந்ததைப் பாதிரியார் பார்த்தார்.
ஒரு மணி நேரம் - இரண்டு மணிநேரம் கழிந்ததும் அவள் அப்படியே இருந்தாள்.
அவள் ஏதோ துன்பத்திலிருப்பதாக எண்ணி, அவளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவளிடம், "நான் ஏதாவது உதவி செய்யக்கூடுமா'' என்று கேட்டார்.
"வேண்டாம் நன்றி! எனக்குத் தேவையான உதவியெல்லாம் நீங்கள் வரும் வரை கிடைத்து வந்தது'' என்றாள்.
****

பேருந்தில் ஏறிய கணேசன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவனைப் பார்த்தான். அவன் ஒரு காலில் மட்டும் செருப்புப் போட்டிருந்தான்.
"ஒரு கால் செருப்பைத் தொலைத்து விட்டாயோ?'' என்று கேட்டான் கணேசன்.
"இல்லை... இல்லை... எனக்கு ஒரு செருப்புதான் கிடைத்து'' என்றான் அவன்.

****

நெடுநேர வாக்குவாதத்திற்குப் பிறகு கணவன் மனைவியைப் பார்த்து "நாம் ஏன் நம் இரண்டு நாய்கள் போல சண்டை போடாமல் சமாதானமாக வாழக்கூடாது'' என்று கேட்டான்.
அவன் மனைவி, "உண்மைதான். இரண்டையும் கட்டிப்போடுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்'' என்றாள்.

****

பணக்காரர் ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறும்போது அயலான் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். பாதிரியார் அவனை நெருங்கி, "நீங்கள் அவருக்கு உறவினரா?'' என்று கேட்டார்."இல்லை" என்றான்."பின் ஏன் அழுகிறீர்?'' என்றார்."உறவினராக இல்லையே என்றுதான் அழுகிறேன்'' என்றான்.
****

2 comments:

Unknown said...

நெடுநேர வாக்குவாதத்திற்குப் பிறகு கணவன் மனைவியைப் பார்த்து "நாம் ஏன் நம் இரண்டு நாய்கள் போல சண்டை போடாமல் சமாதானமாக வாழக்கூடாது'' என்று கேட்டான்.
அவன் மனைவி, "உண்மைதான். இரண்டையும் கட்டிப்போடுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்'' என்றாள்.

அருமை ........

ஆனா முதல் கதை புரியலை...?

த.அரவிந்தன் said...

பாதிரியார் வருகிறவரை அமைதி கிடைத்திருந்தது என்று பொருள்.