-------
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0DU-jkT3XN0-nKUPHqyI1a_vdlXLhib3QqESLDstElny4u4CG4zndiXouQYsOn4720Y95dbxteNXkoYweR7PX1outbhrQGXjJkKZcF3NV_j-vr2FJ_yrwH0-feEZzHH1EI0FSHbzKG10/s400/lane.bmp)
மிதித்தபடியே
இறக்கி வைக்கப்படும்
பலரின் பாரங்களால்
காய்ந்து கருகிவிடுகின்றன
மைதானத்துப் புற்கள்.
த.அரவிந்தன்
-----------------------------------![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWF6vVXI4_wIZPVdLidpBp1PXqUNkGON_kVXM5llpMo9mSyxwqjRBsANS2GIUX5VGOWE3TdtpNuq01r2nFgkpdzyWBV9TiMQJTr-m6TTIGrpMGDEab4CgOUrZhJWLMetU-qwgJc5bRVaE/s400/fly3.bmp)
நீலக் குழைவுநுழைவுகளை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWF6vVXI4_wIZPVdLidpBp1PXqUNkGON_kVXM5llpMo9mSyxwqjRBsANS2GIUX5VGOWE3TdtpNuq01r2nFgkpdzyWBV9TiMQJTr-m6TTIGrpMGDEab4CgOUrZhJWLMetU-qwgJc5bRVaE/s400/fly3.bmp)
நீலக் குழைவுநுழைவுகளை
பார்வையில் பறக்கவிட்டு
நெருப்பாய் நெளிந்து
புளிய மரத்தோரம் நிற்பவள்
வருந்தி பார்க்கலானாள்
சேர்மையிலிருந்த இரு தும்பிகளை
பிடிபடலுக்கு நடுங்கி
வேகம் கூட்டி
கிளை மோதி
சுவர் மோதி
மின்கம்பி மோதி
அந்தரத்தில் புணர்ந்தவற்றின் சுற்றலில்
தொடர் ஓட்டங்கள் கிழித்து
காய்ந்திருந்த அவள் காயங்களின் வடுக்கள்
ரணமாகி இரத்தம் கொட்டின
கரும்பாறை அழுத்தலில்
மூச்சு திணறி
பெண்தும்பியின் முதுகெலும்புகள் முறிகிற
ஓசைகளின் பிரமை
காதுகளுள் குதிக்க
அவள் பிண்ட சராசரமும்
வேட்டுகளாய் வெடித்தன
பொறுக்கமாட்டாது
பிரித்துவிட
கல்லெடுத்து குறிபார்த்தவள்
தன் ஒப்புமை கயமைக்காக
அவளையே ஓங்கிஓங்கி இடித்துக்கொண்டு
பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கினாள்
தும்பிகளின் வால்கள் வளைந்து பிணைந்து
வரைந்திருந்த இதயப்பூர்வம் கண்டு.
த.அரவிந்தன்