Wednesday, December 26, 2007

நீலபத்பநாபனுக்கு சாகித்ய அகாதமி விருது:



முதியோர் இல்லத்தை கதைக் கருவாகக் கொண்டுள்ள நீலபத்மநாபனின் இலை உதிர் காலம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
இவ்விருது 2007-ஆம் ஆண்டுக்கான விருது. இந்நாவல் ஏற்கனவே ரங்கம்மாள் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கவிஞரும் எழுத்தாளருமான நீலபத்மநாபன் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

இவரது பிற நாவல்கள்: தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், பைல்கள், உறவுகள், மின் உலகம், நேற்று வந்தவன், உதய தாரகை, பகவதி கோயில் தெரு, போதையில் கரைந்தவர்கள்.



சிறுகதைகள்:
மோகம் முப்பது ஆண்டு, சண்டையும் சமாதானமும், மூன்றாவது நாள். இரண்டாவது முகம், நாகம்மா, சத்தியத்தின் சந்நிதியில், வான வீதியில்.

No comments: