Monday, December 3, 2007

எரிந்த ரயிலில்....கருகிய பெண்.. யாரால்? எதனால்?



திருப்பதியில் இருந்து செகந்திராபாத் நகருக்கு காலையில் நாராயணத்திரி எக்ஸ்பிரஸ் சென்றது. பயணிகள் இறங்கிய பிறகு யார்டுக்குச் சென்றது ரயில். அங்குச் சென்ற சிறிது நேரத்தில் ரயில் பெட்டி ஒன்றில் திடீரென தீ பிடித்துக் கொண்டது. அந்தத் தீ மளமளவென மேலும் மூன்று பெட்டிகளுக்கும் பரவியது. இதுகுறித்து தீ அணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ அணைப்பு படையினர் வந்து இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்து பயணிகள் இருக்கிற நிலையில் ஏற்பட்டிருந்தால் அதிகமான அளவில் உயிரிழிப்பை ஏற்படுத்தியிருக்கும்... யார்டுக்குச் சென்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தால் அதிர்ஷ்டவசமாக எல்லோரும் உயிர் தப்பினர் என்றுதான் முதலில் செய்தி வந்தது. சேதமடைந்த ரயில் பெட்டிகளினó மதிப்பு 30 லட்ச ரூபாய்க்கும் மேல் என்றும், மின் கோளாறு காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் விளக்கம் தெரிவித்திருந்தனர். ஆனால் போகப்போக எஸ்.3 பெட்டிக்குள் உடல் கருகிய நிலையில் ஓர் இளம்பெண் கிடப்பது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் அருகில் வளையல்óகள் உடைந்து சிதறிக் கிடந்தன. இதனால் அந்தப் பெண்ணை, சமூக விரோத கும்பல் முதலில் கற்பழிக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும், அதற்கு அந்தப் பெண் மறுக்கவே அவளைக் கற்பழித்துக் கொனóறுவிட்டு ரெயில் பெட்டிக்குத் தீ வைத்திருக்கலாம் என்று செகந்திராபாத் ரயில்வே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

No comments: