Friday, November 30, 2007

ஷில்பாஷெட்டி - சர்ச்சை ஷெட்டி!












ஷில்பாஷெட்டி - சர்ச்சை ஷெட்டி!








சர்ச்சை என்று பெயரை மாற்றி வைத்துக்கொள்ளலாம் நடிகை ஷில்பா ஷெட்டி. பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் ஜேடேகூடேவுடன் சர்ச்சை; ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கூரே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சர்ச்சை என்று ஆரம்பித்த சர்ச்சைகளே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் கிளம்பிவிட்டது அவர் குறித்து புது சர்ச்சை. இந்த சர்ச்சையும் மையம் கொண்டிருப்பது லண்டனிலேயே. வருகிற டிசம்பர் 12}ந்தேதி, லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில், "மிஸ்.பாலிவுட்' என்னும் பெயரில் மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளார் ஷில்பா. பரதநாட்டியம் கற்றுக்கொண்டு பாலிவுட்டில் நுழையும் பெண், சினிமா நடனக்கலை கற்றுக்கொண்டு, ஐரோப்பிய நாடுகளில் பாலிவுட் நாட்டியத்தைப் பிரபலப்படுத்துகிறார் என்பதுதான் "மிஸ். பாலிவுட்' கதையாம். கிட்டத்தட்ட ஷில்பாஷெட்டியின் கதைபோல். இந்த ஷோ குறித்த அறிவிப்பு வெளியான உடனே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. லண்டன் வாசிகள் டிக்கெட் கிடைக்காத வேதனையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி சர்ச்சையைக் கிளப்பி இருப்பவர் வைபவி மெர்ச்சன்ட். இவர் நடனப்பயிற்சியாளர் மற்றும் கதையாசிரியர். "மெர்ச்சன்ட் ஆஃப் பாலிவுட் ' என்கிற பெயரில் கடந்த 2005}ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் மேடை நிகழ்ச்சியின் நடனப்பயிற்சியாளரும் கதையாசிரியரும் இவரே. "மெர்ச்னட் ஆஃப் பாலிவுட்'கதையைத்தான் ஷில்பா திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அவர். "கறுப்பி... நாய்...' என்றெல்லாம் ஜேடே கூடே சொன்னதாக நடந்த சர்ச்சையின்போது லண்டன்வாசிகள் உட்பட உலகமே ஷில்பா பக்கம் இருந்தது. இப்போது ஷில்பா பக்கம் நிற்பவர் யாரோ?

No comments: