Monday, February 14, 2011

எரிநட்சத்திரம்



18


இரவில் அவன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது எரிநட்சத்திரம் ஒன்று கடலில் எங்கோ தொலை தூரத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த எரிநட்சத்திரத்தைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற மடத்தனம் வேறெதுவும் இல்லையென அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஓடிப் பாய்ந்தான். இதைப்போல சென்றமுறை அவன் ஓடி பாய்ந்ததில்தான் ஒரு பாறையில் வெட்டுப்பட்டு முன்நெற்றியில் பதினெட்டுத் தையல்களுடன் மருத்துவமனையில் சுயநினைவின்றிக் கிடந்தான்.

No comments: