Wednesday, February 2, 2011

ஒப்புதல்



6

என் காலை ஆசையாய் நக்கிவிட்டு நாலைந்து அடிகள் போவதற்குள்ளேயே, பூனைக்குட்டியின் கழுத்தைப் பிடித்துத் திருகிப் போட்டுவிட்டான் பூங்காவிற்குள் நுழைந்திருந்த பைத்தியக்காரன். அலறிக்கொண்டே காலை கருக்கலில் அது அடங்கிப்போய்விட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய்ப்பூனை அதன் குட்டிகள் சூழ்ந்து நிற்க, செத்துப்போன குட்டியை நாக்கால் நக்கிக் கொடுத்த படியே 'ஏதாவது செய்... ஏதாவது செய்' என்று என்னை நோக்கி 'மியாவ்...மியாவ்' என அலறியது. எனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. உயிரோடு என்னைக் கொல்வதுபோல இருந்த அலறலால் பைத்தியக்காரனை அடிக்க ஓடினேன். உடல் முழுவதும் அழுக்கு அப்பி, சடை முடியோடு, அட்டக் கரியாய் இருந்தவனை அருகில் பார்த்ததும் மூண்டிருந்த தைரியம் கலைய, பயந்துகொண்டு அடிக்காமல் திரும்பிவிட்டேன். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சிமென்ட் பெஞ்சிலேயே நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒருவன், ''வீணாய் அவனை ஏன் அடிக்கப் போகிறாய்? உன் காலை நக்கியதில் ஏறிய விஷத்தால்தான் குட்டி செத்துவிட்டது'' என்றான். எதிர்க்க எனக்கும் மனம் வரவில்லை. ஒப்புக்கொண்டேன்.

No comments: