Saturday, February 12, 2011

மயக்கம்



16


எரியும் வெயிலில் சிறுவர்கள் ஓணான் தேடி புதர்புதராய் குச்சிகளால் தட்டிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவர்களைத் தேடி கத்திகளோடும் உருட்டுக் கட்டைகளோடும் வீடுவீடாய்த் தட்டிக்கொண்டிருந்தார்கள். முள் செடியிலிருந்து தப்பியோடிய ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தபோது அவர்களும் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ஓணான் வாயில் புகையிலையைத் திணித்து கீழே விட்டதும் அது மரண மயக்கத்திற்குப் போய் பேயாட்டம் ஆடுவதைச் சிறுவர்கள் ரசித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவன் கணவனின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க மற்றொருவன் கணவனின் தலையைக் கட்டையால் அடித்து நொறுக்கினான். ஆட்டத்திற்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஓணானின் வாலைப் பிடித்து ஒரு சிறுவன் இராட்டினம்போல் சுற்றித் தரையில் அடித்தபோது அவர்கள் அவளிடமிருந்து பச்சிளம் குழந்தையைப் பறித்து சுவரில் அடித்துத் தெறிக்க வைத்தார்கள். இரத்தம் வெளியேறி குடல் பிய்ந்து போயும் ஓணானை விடாமல் கற்பிதங்களால் ஏறியிருந்த வெறியோடு சிறுவர்கள் மிதித்துமிதித்து அதை மண்ணாக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அவள் முகத்தைச் சிதைத்து, முலையைச் சிதைத்து, யோனியையும் சிதைக்க நம்பிக்கையை உருவினார்கள்.

No comments: