Thursday, December 13, 2007

கருதரித்த பருவச்சொல்


வீதியில் நடந்து
வரங்கள் கேட்காமலே
என்னுள்
அழகாய்க் கட்டினாய்
பிரமிடு

திசை தவறி
என்றேனும் வந்தால்
எட்டிப் பார்

சவமாய்க் கிடக்கிறது
கருதரித்த பருவச் சொல்.
***

ஒரு பார்வையில்
நான்
ஒட்டகம்

முதல் சந்திப்பு
ஈரத்தோடே
என்
இறுதி யாத்திரை

கண்ணீர்விட்டு
தாவரம் வளர்க்காதே
இனிக்கிறதெனக்கு
இந்தப் பாலைவனம்.
***


உன் சிரிப்புக்கு
பகலில் நான்

என்னைப் போலவே
கீழே விழும்
நட்சத்திரமும்.

***

கண்களேயில்லாமல்
நட்சத்திரங்கள்
கண்ணடிப்பதுபோல்
வினாத்தாள்களேயில்லாமல்
தினமும்
உன் பாதத்தில்
விடை எழுதுகிறேன்.

***

No comments: