Tuesday, December 18, 2007

ஒற்றை ஆப்பிளையே சுவைக்கிறோம்




உன்
கூந்தலிலிருந்து
ரோஜா மொட்டு
சாலையில் விழுந்ததற்கே
கண்ணீர் விட்டவன்

நேற்றிரவு
மூக்கணாங்கயிற்றைப் பிடித்து
ஒரு மாட்டை அடிப்பதுபோல
....

ஓருடலான பின்
ஓராயிரம் ஊடல்கள்

வானப்பொத்தலில்
விழுவதில்லை
சூரியன்-சந்திரன்.

***

உன்
வாசலில்
புள்ளிகளாக இறங்கும்
நட்சத்திரங்கள்

கோலம்போடும்
வசந்தம்
வண்ணம் தூவும்
வானவில்

உன்னைச் சுற்றின
ஒட்டியாணம்
அண்டசராசரங்கள்

நிழலைத்
தூது அனுப்பும்
நான்
நெடுமரம்.
***

கனரக வாகனம்
கண்டால்
கனமாகும்
என் மனம்

என்னைப் போலவே
வலியைச் சுமந்து

நகரத்தை அடைய
இரவிலேயே அனுமதி

எனக்கும்
உன்னை.
***

மார்கழி மாத
கடுங் குளிர்

கவலையில்லை

உன் நினைவுகள்

மே மாத
கொடு வெயில்

கவலையில்லை

உன் விழிகள்.
***

அற்றை நாள்
முதல்சுவைக்கிறோம்
ஒற்றை ஆப்பிளை

ஓரச்சதை ருசியிலேயே
மயங்கி
ஒடிந்து விழுகிறோம்

கர்ப்பகிரகமாய்
ஒளிரும்
கறுப்புக்கொட்டைகளில்
தேவ சந்தோஷம்.
***

No comments: