Saturday, March 21, 2009

கல்யாணத்துக்குப் போகையில்...

பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்

மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'

வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.
நன்றி: உயிரோசை

Friday, March 20, 2009

வகிடுப் பயணம்


நடு வகிடோ
கோணல் வகிடோ எடுத்து
நேற்றுவரை
சீவிக்கொண்டிருந்த கண்ணாடி
மார்பளவு புகைப்படத்தைக்
கணினியில் கொடுத்துவிட்டு
சுழல்நாற்காலியில் அமர்ந்து
இமைகளில் கண்களைச் சாய்த்து
காத்திருக்கிறது
கத்தரிக்கோலின் புதுப் பயணத்திற்கு.

நன்றி: உயிரோசை

Wednesday, March 11, 2009

முதல் ஆட்டம்








வேப்பஞ்சாறின் கசப்புக்குள்


புன்முறுவலோடு


தாய்ப்பால்




னி


ப்


பு


பதுங்கிக்கொள்ள


அழுகையோடு குழந்தை


அதைத் தேடத் தொடங்கியது


தன்


முதல்


கண்ணாமூச்சு ரே ரேயில்.


நன்றி: உயிரோசை

வெள்ளை ஓணான்




அந்தியில் நேர்ந்த மோதலுக்கிடையே

யாரோ

என் தலையில்

ஒரு வெள்ளை ஓணானை

விரட்டி விட்டிருக்கிறார்கள்

காலையில் கண்ணாடி முன்

நின்று கவனித்ததிலிருந்து

பிடிப்பதற்குப் போராடுகிறேன்

என்னை ஏ

மாற்றி ஏ

மாற்றி

கறுத்த வேலியில்

அது

எளிதாகத் தப்பிப் போகிறது.


நன்றி: உயிரோசை