Friday, March 20, 2009

வகிடுப் பயணம்


நடு வகிடோ
கோணல் வகிடோ எடுத்து
நேற்றுவரை
சீவிக்கொண்டிருந்த கண்ணாடி
மார்பளவு புகைப்படத்தைக்
கணினியில் கொடுத்துவிட்டு
சுழல்நாற்காலியில் அமர்ந்து
இமைகளில் கண்களைச் சாய்த்து
காத்திருக்கிறது
கத்தரிக்கோலின் புதுப் பயணத்திற்கு.

நன்றி: உயிரோசை

No comments: