Thursday, December 20, 2007

உலகம் முழுவதும் 110 பத்திரிகையாளர்கள் கொலை!


ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அடங்கிய தன்னாட்சி அமைப்பு ஒன்று பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.



ஆய்வு முடிவின் படி பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதன்மை நாடாக இராக் உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இங்கு 50 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2003-ம் ஆண்டில் இராக்கில் போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை மொத்தம் 250 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



இரண்டாவது நாடு சோமாலியா.



மூன்றாவதாக வரும் நாடு இலங்கை. கடந்த ஆண்டில் இலங்கையில் 4 பத்திரிகையாளர்களும், இந்த ஆண்டில் 7 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.



நாலாவதாக வரும் நாடு பாகிஸ்தான். இந்த ஆண்டில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



காங்கோ, எரித்ரியா, குவாடி, மாலா ஆகிய நான்கு நாடுகள் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது இடங்களில் வருகிறது. இந்தியா ஒன்பதாவது இடத்தில் வருகிறது. இந்த நாடுகளில் எல்லாம் 2 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.



கடந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 96.



இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 110.



கொடுமை...கொடுமை.... கொடுமை........ கொடுமைகளுக்கெல்லாம் பெருங் கொடுமை!

No comments: