Saturday, January 29, 2011

ஒருவன் மட்டும் நடக்கும் சாலை



3

ஒருவன் மட்டும் உயிரோடு நடக்கும் சாலையாக அது இருக்கிறது. அந்தச் சாலையின் எல்லையில் நுழையும் எவரும் உயிரற்ற பிணமாகவோ அல்லது பிணம் என்ற தகுதிக்கும் உரிமை கொண்டாட முடியாதவராகவோ மாறித்தான் போய் வரமுடிகிறது. உயிரோடிருக்கும் நானும் ஒவ்வொரு முறையும் அந்த நேர் சாலையில் நுழைந்து வளையும் அதன் முடிவிற்கு வரும் வரை பிணமாக மாறிப் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் பிணத்தை என்னையே பார்க்க வைக்கும் அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டும் உயிரோடு பயணிப்பதையும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். எனக்கு இன்னொன்றும் உறுதியாய்த் தெரியும். தன்னை யாரும் நம்பாதது பற்றி அவன் அக்கறையே கொள்ளாமல் இதே தெருவில்தான் "தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள்' என்று எல்லோர் முன்னிலையிலும் உரக்கக் கத்தியவாறே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்தான்.

No comments: