Friday, January 28, 2011

மணல்



2


வெயில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த கோடை மதியம். மிகவும் சொற்ப விலைக்குப் பேசப்பட்டவளைக் கரையிலிருந்து கீழிறக்கி ஆற்று மணல் வழியாக மூன்று பேர் அழைத்து வந்தார்கள். இரு கரைகளின் மறைவே போதுமென அவள் எந்த இடத்திலும் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் அவர்கள்தான் பயந்துகொண்டு ஒவ்வோர் இடமாகக் கடந்தார்கள். நெடுந்தூரத்திற்குப் பிறகு அவள் நடக்க முடியாமல் துவண்டு, மயக்கத்தோடு நிழல் கீறலாய்
இருந்த இலந்தை செடிக்குக் கீழ் படுத்துக்கொண்டு எழுந்துகொள்ள மறுத்துவிட்டாள். கால்களைக் கொளுத்திய மணற்சூடு அவர்களுக்கும் அந்த இடம் சரியானதே என்று உணர்த்தியபோது வலக் கரையில் ஒருவனும், இடக் கரையில் ஒருவனுமாக ஏறி பாதுகாப்புப் பணியில் ஈடுபட, கீழே நின்றவன் முரடாய் அவளோடு புரண்டான். நெஞ்செலும்புகளோடு ஒட்டிவிட்ட அவள் முலைத் தோல்களையும் விடாமல் வலியெடுக்க வைத்து, விந்தை
வெளியேற்றிவிட்டு பணிக்குத் திரும்பினான். இடக் கரையிலிருந்து கீழிறங்கி வந்தவன் முதலாமவனின் விந்து ஈர அருவருப்பால் கொடுத்த பணப் பங்கிற்காகவாவது புணர வேண்டும் என்ற கதியில் அவசரமாக அவள் குறியில் இயங்கினான். கத்தியைப்போல் அவள் இடுப்பெலும்பு ஒன்று அவன் அடி வயிற்றைக் குத்தியபோது அவளை உற்றுப் பார்த்தான். மூச்சிரைக்க உறங்கத் தொடங்கிவிட்ட அவள் சவம்போல் தோன்றினாள். அதற்குமேல் அவனால் அவளைப் புணர முடியவில்லை. குறியை உருவிக்கொண்டு, கைப்பிடி மணலை அள்ளி அவள் குறியில் கொட்டிவிட்டு மேலேறி வந்தான். முதல் அனுபவம் பெறப்போகும் சந்தோஷம் குறியில் ஒழுக, இறங்கி வந்த வடக் கரைக்காரன் எப்படியோ நிமிர்த்துப் பிடித்து அவள் குறிக்குள் அவனுடையதைச் சொருகி அடித்தான். மணலால் குறிகள் அங்கங்கே கீறி எரிச்சலோடு இரத்தம் கொட்டுகையிலும் அவன் அவளை எழவிடவில்லை. அழுத்திப்
பிடித்து அடித்து முடித்துத்தான் மேலே வந்தான். அவர்கள் மட்டுமான திரும்பின நடையில் கரையின் வெடிப்பொன்றைத் தாண்டுகையில் அவர்களிடம் அவன், "குழியில் ஒரே மணல்' என்றான்.

No comments: