Monday, July 13, 2009

வெயிலை உலர்த்தும் இரவு


பகல் வெளியில் பயணிக்கையில்
கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து
வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான்
இரவு படுக்கையில்
போரின் மையத்திலிருந்து
கொத்துக்கொத்தாகப் பிய்த்து
உதறி, பரப்பி
மேலே படுத்துருண்டவாறு
வேக வட்டமடிப்பான்
ஈரமுள்ள வெயில் பக்கம்
சொணை சுள்ளெனடிக்க
அதிகச் சுற்றடிப்பான்
நள்ளிரவு சோர்கையில்
உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி
உறங்கப் போவான்.
நன்றி: நவீன விருட்சம்

No comments: