Monday, June 8, 2009

சீழ்க்கை வளையம்


பனி பூத்த குளத்தில்
கல்லெறிந்து போகிற சிறுமியாக
கருக்கல் தெளிவில்
சீழ்க்கையடித்து பறக்கிறது
முதல் குருவி

கலங்கிய மேகம்
சீழ்க்கையைக் கடத்தி
வானமெங்கும் போகிறது
வளையம்
வளையமாய்.
நன்றி: உயிரோசை

2 comments:

கடைக்குட்டி said...

சினிமா பாடலின் சந்தம் இருக்குது

த.அரவிந்தன் said...

நன்றி