Friday, October 10, 2008


கடந்து போதல்...
---------------------
பிஞ்சுச் சுவடுகளைக்
கவிதைகளாகப் பதிக்கும்
செல்ல மகள் ஆளுமை பற்றிக் கேட்க
நண்டின் கால்களால் எழுதி
கடற்கரை சொன்னது:
"கடலைக் கடந்ததே கவிதை'

காகிதக் கத்திக்கப்பலில் பயணித்து
அபாய எதிரலைகளில் உருக்கொள்ளும்
வெள்ளைத் தாள்களையெல்லாம்
கிழித்தெழுதி போவதைப்
பார்த்து கடல் சொன்னது:
"ஆகாயம் கடந்ததே கவிதை'

குளிர்ச்சியைப்போல் மழையை
வீட்டிற்குள் அழைத்து
வரமுடியாத கோபத்தில்
ஈசல் உதிர்த்துப் போன சிறகுகளால் பறந்து
வார்த்தைகளைப் பால்வீதியில்
தனித்தனிக் கிரகமாய் மிதக்கவிட
ஆகாயம் சொன்னது:
"சூரியனைக் கடந்ததே கவிதை'

2 comments:

தமிழ்நதி said...

சிந்திக்கத் தூண்டுகிற கவிதை. உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து வந்தேன். வலைப்பூவிற்குப் புதியவராயிருந்தாலும் அறிமுகமான பெயராயிருக்கிறது.

த.அரவிந்தன் said...

பகிர்வுக்கு நன்றி