Saturday, May 23, 2009

மிருதகரம்


வார் பிடிக்காத மிருதங்கத்தைத்
தூக்கித்தூக்கி
ஒருவன்
மஞ்சள் வண்ண வீட்டு வாசல் முன்
ஐந்து நிமிடம் விடாமல் வாசித்தான்

டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டக்டக்குடக்டக்குக்கு
க்குடகுடகுடகுடக்கு
ஐம்பது பைசாவை
மகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு
உள் பக்கமாய் ஓடியவன்
உலகின் கடைசி விளிம்பைக்
கடக்க இயலாதென்பதுபோல
கொல்லைச்சுவரை முட்டிக்கொண்டு
நின்றான் தகப்பன்
வாங்கிப் பார்த்து
துணிப்பைக்குள் பைசாவை
அலுத்தெறிந்து நகர்ந்தவன்
நாய்களின் குரைப்புகளோடு
பச்சை வண்ண வீட்டு வாசல் முன்
பத்து நிமிடம் விடாமல் வாசிக்கிறான்

டக்குடக்கு
டகடகா
டக்குடக்கு
டகடகா
டக்டக்குடக்டக்குக்கு
க்குடகுடகுடகுடக்கு
நன்றி: உயிரோசை

No comments: