Saturday, March 21, 2009

கல்யாணத்துக்குப் போகையில்...

பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்

மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'

வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.
நன்றி: உயிரோசை

4 comments:

யாத்ரா said...

உயிரோசையிலேயே வாசித்தேன், நன்றாயிருந்தது

த.அரவிந்தன் said...

பகிர்வுக்கு நன்றி

ச.முத்துவேல் said...

கவிதையை செய்யத்தெரியாதவர்கள் நவீன கவிஞர்கள், நல்ல கவிஞர்கள்.
கவிதை இயல்பாய் வரவேண்டும். நல்ல கவிதை, அனுபவம்.

த.அரவிந்தன் said...

பகிர்வுக்கு நன்றி