Thursday, November 29, 2007

பச்சைவளையல் காக்குமா பச்சிளங்களை?



தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)



செய்தி:




சென்னையில் சில பகுதிகளில் புது பீதி. பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு உடனே பச்சை வளையல் வாங்கிச் அணிவிக்க
வேண்டுமாம். ஒரு டஜன் பச்சை கண்ணாடி வளையல் வாங்கி அதில் பாதியை அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குப்
போடவேண்டுமாம். மீதியை குழந்தை கையில் அணிவிக்க வேண்டுமாம். இல்லையேல் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று
பரவியுள்ளது பீதி. அதுவும் இந்த வளையலைச் சொந்தக் காசு கொடுத்து வாங்கக்கூடாதாம். உறவினர்கள் அல்லாதவர்கள் ஐந்து பேரிடம் ரூபாய் இரண்டு வீதம் பெற்று வளையல் வாங்கவேண்டும் என்பது புரளியில் முக்கியமான விதியாம். இதனால்
சென்னையில் உள்ள வளையல் கடை முழுவதும் ஒரே கூட்டம். இந்தப் புரளியால் பச்சை வளையலுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு
உள்ளது.

கேள்வி:


திருந்தவே மாட்டீர்களா? பெரியார் தோன்றிய மண்ணில் இப்படிப்பட்ட புரளிகளை நம்புகிறவர்கள் இருக்கிறீர்களே... எத்தனை
பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதே இல்லையா? மகளுக்குத் தாய் பச்சை புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும். தாய்க்கு
மகள் மஞ்சள் புடவை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று முன்பு புடவைக்காரர்கள் புரளி கிளப்பிவிட்டார்கள். எல்லோரும்
புடவை வாங்கிக் கொடுத்தீர்கள். அதைப் பார்த்து இப்போது வளையல்காரர்கள் பச்சை வளையலை வாங்கி அணிய வேண்டும்
என்று புரளியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். அது தெரியாமல் நீங்கள் வளையல் கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒருவேளை கார் நிறுவனத்தார், பேருந்து நிறுவனத்தார், விமானம் விற்பன்னர்கள் யாராவது வெள்ளை நிறத்தில் கார், பேருந்து,
விமானம் வாங்கிவிட்டால் நல்லது என்று புரளியைக் கிளப்பிவிட்டால் உடனே வாங்குவீர்களா? யோசிக்க மாட்டீர்கள். வாங்க
முடிகிற விலையாக இருப்பதால்தானே இப்படிப் புரளியை நம்பி ஓடுகிறீர்கள். அங்கே என்ன ஒரு குரல் கேட்கிறது... பரிகாரம்
செய்துகொள்வோம் என்றுதானே... அடப் போங்கய்யா நீங்க திருந்தவே மாட்டீங்க....
குறைந்தபட்சம் மடமைத்தனம் எனும் குழியில் உங்கள் குழந்தைகளையாவது இறக்காமல் இருக்கப் பாருங்கள்

2 comments:

மாதங்கி said...

ஆம்,
விமானம் கார் முதலியவற்றை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வார்கள்? நல்ல கேள்வி ரவி

த.அரவிந்தன் said...

ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மாதங்கி.