Thursday, November 22, 2007

நெஞ்சத்துக் கர்ப்பம் (2)



* நீ
என்னை
புளியமரம் போல்
உலுக்கி
சந்தோஷத்தைப் பொறுக்கிறாய்

விழுகிற பழத்துள்
முளைக்கிற இதயம்.

***

* மையச்சாலையில்
பிரிவின்
வேதனையுடன்
கிடக்கும்
ஒற்றைச் செருப்பாக
எங்கோ
கழன்று
விழுந்துவிட்டது
என் மனம்.
***
* வீதியில்
நடந்து
வரங்கள் கேட்காமலே
என்னுள்
அழகாய்க் கட்டினாய்
பிரமிடு

திசைதவறி
என்றேனும் வந்தால்
எட்டிப் பார்

சவமாய்க் கிடக்கிறது
கருத்தரித்த
பருவச் சொல்
***
(விடாது அலைவோம்)

No comments: