Monday, November 19, 2007

நெஞ்சத்துக் கர்ப்பம் (கவிதை)


* உச்சிக்கிளை
உயரத்தை
அளந்துகொண்டா
முளைக்கத் தொடங்கும்
விதை?

சங்கமிக்கும்
வழியைக்
கண்டுகொண்டா
மலையிலிருந்து
விழத்தொடங்கும்
நதி?

உருண்டு தொடர்கிறது
என்
உயிர்
உன்
பாதத்தை....

***

* என்
ஆசைகளை
நெருப்பில் சேமிக்கிறேன்

உன்
வெட்கத்தை ஊதி
விளக்கை அணைக்கிறேன்

பேச்சொலி தேய
மூச்சொலி மேய்கிறது.

***

* வானவில்லிலிருந்து
ஒரு வண்ணத்தை மட்டும்
உருவியதைப்போல்
தேடுகிறேன்
அழகான சொற்களை

ஒருமுறை
திரும்பிப் பாரேன்.

***

(விடாமல் அலைவோம்)

No comments: