Wednesday, February 16, 2011

பேரலறல்



19



தூக்குப் போட்ட கண்களாக நரம்புகளில் இரத்தங்கள் இறுக்குமளவு அவள் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவளைத் திமிற விடாமல் பிடித்து மூட்டையாகத் தூக்கிக் கொண்டு வந்து, பகலில்கூட யாரும் வராது அந்தப் பாழ் கட்டடத்திற்குள் செடிகள் முளைத்திருந்த தரையில் போட்டார்கள். மூச்சிரைக்க எழுந்தவள் அங்கிருந்து மிரட்சியோடு ஓட முயன்றாள். அவளை எட்டிப் பிடித்த ஒருவன், "விபச்சாரமாடி செய்ற... தேவடியா'' என்று அடித்து நொறுக்கி அவள் புடவையைத் தூக்கி குறியைச் செலுத்தி நின்றவாகிலே இயங்கினான். அவனை
அவள் தள்ள முயற்சித்தபோது இன்னொருவன் பின்னால் வந்து அவள் முதுகு பழுக்க அடித்துப் பிருட்டத்தைப் பிளந்து அவன் குறியைச் செலுத்தி இயங்கினான். இரண்டு காட்டெருமைகளிடம் மாட்டிக்கொண்டதுபோல அவள் திமிறிக் கொண்டிருந்தபோது மற்றொருவன் அவள் இடக்கையையும் வேறொருவன் அவள் வலக்கையையும்
கல்லாலேயே தாக்கி அவர்கள் குறிகளைப் பிடித்துக்கொள்ளச் செய்து இயங்கினார்கள். நால்வரின் வெறிச் சத்தத்தால் ஒதுங்கி நின்ற ஐந்தாமவன் கிளர்ச்சியுற்று உடைந்திருந்திருந்த இரண்டு சுவர் பக்கங்களிலும் கால்களை வைத்து ஏறி வந்து அவள் கன்னத்திலேயே அறைந்தறைந்து வாயைத் திறந்து குறியைச் செலுத்தி இயங்கினான். மிருகக் கழிவை ஒவ்வொருவாய் வெளியேற்றிவிட்டு அவர்கள் கிளம்பியபோது ஒருவன், 'பாவம். போனாப் போகுது' என்று ஓர் ஐம்பது ரூபாய்த் தாளை அவள் முகத்தில் வீசியடித்தான். கீறல் இரத்தங்களைத் துடைத்துக்கொண்டே ஆவேசத்தோடு அந்தத் தாளை எடுத்தவள், "உங்களை நீங்களே ஒழுத்துக்கொண்டதற்கு எனக்கெதற்குக் காசு?'' என்று அதைத் தூக்கியெறிந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பாழ் சுவர்களிலிருந்து கீறிப்பிள்ளை, ஓணான்கள், பல்லிகள் எல்லாம் அதிர்ந்து ஓட ஒரேயொரு பேரலறல்தான் கேட்டது.

No comments: