Friday, February 4, 2011

தண்டனை



8

இருள் கசிந்த தனியறையின் பகல் மூலையில் நாற்காலி போட்டு அவர் உட்கார்ந்திருந்தார். வரிசையில் தயங்கி நின்ற பெண்களை எல்லாம் பின்னால் போகச் சொல்லிவிட்டு, விற்றுக்கொள்வதில் அனுபவம் வாய்ந்தவள் அவர் முன்னால் வந்தாள். கச்சுக் கொக்கிகளை வேகமாக அவிழ்த்து முலைகளைத் தொங்கவிட்டு, உள்ளாடையையும் உருவிவிட்டு பாவாடையோடு புடவையையும் தூக்கிக்கொண்டு கால்களை அகட்டி நின்றாள். கண்ணாடியைக் கழற்றுவதுபோல இரண்டு கண்களையும் பெயர்த்துக்கொண்டு நெருங்கிச் சென்று நிதானமாக அவர் பார்வையால் மேலும் கீழுமென ஊடுருவினார். பலமுறை அவர் ஊடுருவிப் பயணத்ததின் தடங்களைப் பார்வைகள் நினைவூட்டின. ஆனால், வகுத்துக்கொண்ட விதியை மீறக்கூடாது என்பதற்காக அவர் முழுதாய் ஆராய்ந்து முடித்து அடுத்தப் பெண்ணை வரச் சொன்னார். தப்பிக்கக் கிடைத்த மிக எளிய விதியை விட்டுவிட மற்றப் பெண்களுக்கும் விருப்பமில்லை. மூன்று மணி நேரத் தொடர் ஆராய்ச்சியின் நிறைவுக்குப் பின் எல்லோருமே மன்னிக்கப்பட்டார்கள்.

No comments: