Sunday, February 6, 2011

அழி



10


குற்ற உணர்ச்சி கொள்வதற்காகவே அவன் குற்றங்கள் புரிபவன். முதன்முதலாய் ஒருவனைத் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய வைத்தபோது, குற்ற உணர்ச்சியால் பல இரவுகள் தூங்காமல் பைத்திய நிலையில் செத்தவனின் நாக்கு தொங்கலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். பிறகு போகப் போக, ஒருவர், இருவரைக் கொன்றதற்காக எல்லாம் உணர்ச்சிக் கொள்ளமுடியாமல் நூறுநூறு பேராய்க் கொன்றபோது கொஞ்சம் உணர்ச்சி கொண்டான். இப்போது அதுவும் போய் இனம் இனமாய் அழித்தும் எதுவும் கொள்ள முடியாமல் உள்ளதனைத்தையும் மொத்தமாய் அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்குக் குற்ற உணர்ச்சிதான் முக்கியம்.

No comments: