Friday, June 12, 2009

நிலவோடு நண்டு



நிலவுக்கும்

மூன்று லட்சத்து
எண்பத்தி நாலாயிரத்து
நானூற்று மூன்று கி.மீ.
தூ
மி
ரு
க்
கு
ம்

நண்டுக்கும்
இடையேயிருப்பது
பகையா?
உறவா?

நிலவு பூரணமாயிருக்கையில்
இது சதையிலாது கூடாக மேய்கிறது
நண்டு முழுதாய்க் கொழுத்து அலைகையில்
அது பிறையுமிலாது இருளாய்க் கரைகிறது

ஆளுகைக்கு வருகையில்
மாறிமாறி அழித்துக்கொள்கின்றனவா?
அல்லது..
ஆபத்துக் காலங்களில்
சிபி சக்கரவர்த்திபோல தங்களை
அறுத்து கொடுத்துக் கொள்கின்றனவா?

இரண்டிற்குமிடையில்
ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும்
என் விருப்பம்
பௌர்ணமியில் நிலவு
அமாவாசையில் நண்டு
நன்றி: நவீன விருட்சம்

1 comment:

ச.முத்துவேல் said...

very interesting. பிடிச்சுருக்கு.எளிமையான, ரசனையான கவிதை.