Friday, June 5, 2009

புணர் சிற்பம்


உச்சத்தை எட்ட
நூற்றாண்டு பலவாய்
முடிவுறாத
முயங்கலில் இருக்கின்றன
அச் சிற்பங்கள்

தாங்க முடியாத முனகல்கள்
புறாக்களாகப் பெருகிப் பறக்கின்றன

கிளை பிரிந்து
பரவும் வியர்வைகள்
கரும்பாறைச் சுவரை
சில்லிடும்
மென் மஞ்சமாக்குகின்றன

தரிசனத்துக்கு வருபவர்கள்
இயல்பு உடைந்து
விந்து ஊறும் விழியால்
தொய்வடையா சிற்ப உறுப்புகளை
மேலும் நீவி விடுகிறார்கள்

உருவிக்கொண்டு
தரையிறங்கி வரும் சிற்பங்கள்
இடைஞ்சல் புரியும்
பெருமூச்சுகளைக் களைந்து
புணர்ந்துபோட்டுவிட்டு
மீண்டும் போய்
முயங்கத் தொடங்குகின்றன.
நன்றி: உயிரோசை



3 comments:

நந்தாகுமாரன் said...

அதி அற்புதம்

கவி அழகன் said...

அருமையான வரிகள்
அழகான வரிகள்


இலங்கையில் இருந்து யாதவன்

த.அரவிந்தன் said...

இருவருக்கும் நன்றி