
------------------------------------
அறிமுகித்த பத்து நிமிடங்களில்
இருவரும் சலித்து
அறுபது சொற்கள் உதிர்த்தனர்
அதில் பிடிபடலும் தப்பித்தலும்
பிடிபடலும் தப்பித்தலுமாய்
மறதிக்காட்டுக்குள் பூச்சிகளாகி மறைந்துவிட்டன
முப்பத்திரண்டு
ஞாபக வரிசையில்
ஊதாரிகளாய் நிற்கின்றன
பதினெட்டு
மீதமிருக்கும் பத்து சொற்களின்
கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு
வாக்கியங்களின் வழியே
வேக நடையில்
இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள்
இவன் அறியாத அவன் ஊருக்கும்
அவன் அறியாத இவன் ஊருக்கும்
நன்றி: உயிரோசை
4 comments:
MM..GOOD
super thala
rasiththen
puthiya arimugaththil vaakkiyangal vazhithaan payanikka mudiyum enpathai azhuththa solleeteenga
இருவருக்கும் நன்றி
Post a Comment